Sunday, February 22, 2015

நெஞ்சம் மறப்பதில்லை
















நெஞ்சம் மறப்பதில்லை-தன்
நினைவை இழப்பதில்லை
நாம் கேட்டிருப்போம் இன்றும் கேட்டிருப்போம்
காதுக்கு மூடி இல்லை -எந்த
காதுக்கும் மூடி இல்லை (நெஞ்சம்)
காலங்கள் தோறும் உன்கவி பாடி
களிக்கும் தமிழ் மனமே
வரும் காற்றினிலும் அந்த பாட்டினிலும் என்றும்
காண்பது உன் மனமே-என்றும்
காண்பது உன் மனமே (நெஞ்சம்)
பட்டிணத் தாரின் தத்துவ மெல்லாம்
யாருக்கும் புரிய வில்லை
அதை பதவுரை யாக பாட்டினில் தந்தாய்
யாரும் மறக்க வில்லை-அதை
யாரும் மறக்க வில்லை(நெஞ்சம்)
நினைப்பது எல்லாம் நடந்துவிட்டாலோ
தெய்வம் ஏது மில்லை-அதை
மனதினில் பதித்தாய் ஆன்மீகம் தந்தாய்
மறுப்பவர் யாரும் இல்லை-கடவுளை
மறுப்பவர் யாரும் இல்லை(நெஞ்சம்)
நினைக்கத் தெரிந்த மனங்களுக் கெல்லம்
மறக்க தெரிய வில்லை
நீ நிரந்தர மானவன் உன் நிரந்தர மாணவன்
குரல் ஏன் கேட்கவில்லை-உனக்கென்
குரல் ஏன் கேட்க வில்லை(நெஞ்சம்)

No comments:

Post a Comment