Saturday, April 25, 2015

விதியினைதுண் டாக்கும் விரைந்து

பன்னீர் இலைவிபூதி பார்த்தீரோ செந்தூரன் 
பன்னிரு கைகளதில் பார்த்திடலாம் -என்றும் 
கதியென்று நாம்பூசும் கந்தன் விபூதி 
விதியினைதுண் டாக்கும் விரைந்து 


விதியினை துண் டாக்கும் விரைந்து 

ஆம் பாருங்கள் விபூதி என்னும் எழுத்தினைப் பாருங்கள் வி தி யை இரண்டாகப் பிளந்துள்ளதே..வி (பூ) தி 
கதிர்வேல் சூரனை பிளந்ததுபோல் பிளந்துள்ளது. 

பன்னீர் இலைவிபூதி திருச்செந்தூரில் வழங்கப்படுகிறது. அந்த பன்னீர் இலையில் பன்னிரு நரம்புகள் காணப்படும் அவை முருகனின் பன்னிருகைகளாகவே கருதப்படுகிறது

No comments:

Post a Comment