Saturday, April 25, 2015

இல்லாமல் இல்லை

கண்டறியு முன்னாலே புவியீர்ப்பு விசையிங்கே 
இல்லாமல் இல்லை 
உண்டறியு முன்னாலே செங்கரும்பில் தித்திப்பும்
இல்லாமல் இல்லை 
பண்டறியு முன்னாலே கண்டங்கள் அண்டங்கள் 
இல்லாமல் இல்லை 
உண்டில்லை என்றாலும் ஒருதெய்வ மெந்நாளும் 
இல்லாமல் இல்லை…. 
பட்டுணரச் செய்கின்ற பகவானும் அனுபவமாய் 
இல்லாமல் இல்லை… 
தொட்டுணர முடியாத பகாவானும் பகவானும் 
இல்லாமல் இல்லை…

No comments:

Post a Comment