Saturday, April 25, 2015

ஏழைசொல் ஏற்கும் எழுத்து

முந்தி வரவேற்கும் முக்கனியி லொன்றுதரும் 
பந்தி விருந்து படைக்கவரும் - சந்ததியை 
வாழவைக்கும் அம்மாவும் வாழையு மொன்றென்ற 
ஏழைசொல் ஏற்கும் எழுத்து. 


முந்தி வரவேற்கும்-மாவிலை தோரணம், வாழைக்கன்று 
முக்கனியி லொன்றுதரும்-மா, வாழை 
பந்தி விருந்து படைக்கவரும்-வாழைஇலை, மாவடு ஊறுகாய் 

சந்ததியைவாழவைக்கும் அம்+மா(மாமரமும்)(கர்ப்பகாலத்தில் மாங்காய் சாப்பிடுதல் குழ்ந்தை இதயத்தினை பல்மாக்குமாம்), 
வாழையும் சந்ததியைவாழவைக்கும்

No comments:

Post a Comment