Saturday, March 21, 2015

உறுதி

உறுதி
மண்ணின் உறுதி நிலம்
மனதின் உறுதி பலம்
தண்ணீர் உறுதி பனி
பனியின் உறுதி மலை
பஞ்சின் உறுதி இழை
இழையின் உறுதி துணி
நெஞ்சின் உறுதி வைராக்யம்
நிலக்கரி உறுதி வைரம்
விதையின் உறுதி மரம்
இதய உறுதி மனம்
கடல் துளி உறுதி உப்பு
மழைத்துளி உறுதி முத்து
நம்பிக்கை உறுதி வாழ்க்கை!

உப-யோகம்

உப-யோகம்
’’இளைஞர்கள் உபயோகமற்றவர்கள் இல்லை
இளைஞர்கள் உபயோகம் மற்றவர்கள் அறியவில்லை
என்னிடம் 100 இளைஞர்களை கொடுங்கள்
இம்மண்ணையே மாற்றிக் காட்டுகிறேன்’’ என்றார்
இது விவேகானந்தரின் உப --யோகம்...!
நான்கு யோகத்திலும் சிறந்த உப--யோகம்
நாட்டுக்கும்... நமக்கும்...

தீயால் பிழைக்க வைத்தான்

தாயால் பிறக்க வைத்தான்;-எங்களை
தீயால் பிழைக்க வைத்தான்!
தலைமேல் எழுதி வைத்தா;-எங்களை
தணலில் உழைக்க வைத்தான்?
(தாயால்)
விதவித மாக சமைக்கும் நெருப்பை
விதவித மாக சமைப்போம்!
வேள்விக்கு மட்டும் உதவிய நெருப்பை
வேட்டு வெடிகளில் அமைப்போம்!
புதுபுது ஒலையில் குறளா வடித்தோம்
ஓலை வெடிகள் மடித்தோம்!
பொடிபொடித் துகளை அணுகுண்டாக்க
உயிரை பணயம் வைத்தோம்! (தாயால்)
ஒருநாள் மக்கள் திருநாள் காண
ஒவ்வொரு நாளும் உழைப்போம்!
ஒருசாண் வயிறை வளர்ப்பதற் காக
உயிரை பணயம் வைத்தோம்! (தாயால்)

கந்தக துகளில் விந்தைகள் செய்து
கனலுக்கும் நிறங்கள் கொடுப்போம்
கனல்பட் டெழும்பும் கருநிறப் பாம்பை
மாத்திரைக் குள்ளே அடைப்போம்!
கந்தகம் நுணுக்கவும் வெடித்திரி திரிக்கவும்
எங்களிடம்தான் கொடுப்பார்!
எந்திரம் வெடித்தால் நட்டம் என்று
எங்களை பணயம் வைத்தார்!
(தாயால் )

கள்ளிப் பாலை ஏன் தந்தார்…

மலரும் கொடியும் பெண்ணென்பார்…
மதியும் நதியும் பெண்ணென்பார்
மழலை மட்டும் பெண்ணென்றால்-அதை
மங்கையரே ஏன்கொல்கின்றார் (மலரும்)
நாடும் இறையும் பெண்ணென்பார்-தன்
நாடும் மொழியும் பெண்ணென்பார்
குழந்தை மட்டும் பெண்ணென்றால்-அதை
கூடா தென்றேன் அழிக்கின்றார் (மலரும்)
ஏங்கி அழுத குழந்தைக்கு
இறைவி வந்து பால் தந்தாள்
தாங்கி பெற்ற குழ்ந்தைக்கு
கள்ளிப் பாலை ஏன் தந்தார்…?(மலரும்)

சு.அய்யப்பன்

நம்மவர் தியாகம் கூறும்

நம்மவர் தியாகம் கூறும்
நம்மை நாமே ஆளும்
நாளென நாம் கொண் டாடும்
நம் கொடி ஏற்றத் தூவும்-மலர்
நம்மவர் தியாகம் கூறும்
காந்தியின் அகிம்சைப் போரும்
கனலெழு போஷ்படை வீறும்
ஏந்திய கொடியினில் தோன்றும்-நம்
இருதயம் துடித்தெழத் தூண்டும்
சத்தியாக் கிரஹமே வெல்லும்-அதை
சத்திய சோதனை சொல்லும்
ஒத்துழை யாமை இயக்கம்-அதை
உலகமே இன்றும் வியக்கும்
பலமிகு ஜான்சி வாளும்
படையுடன் நாச்சி யாரும்
திலகரும் படேலுடன் நேரும்
தியாகிகள் வரிசையைப் பாரும்
பாஞ்சையின் பொம்மனைப் பாரும்
பகத் சிங் உணர்த்திய தீரம்
வாஞ்சியை இயக்கிய மூலம்
வ உ சி பாரதி வீரம்
கொடியினில் கசிந்திடும் ஈரம்
கொடும் டயர் கொடுமையைக் கூறும்
கொடியினை முடியிலும் தாங்கும்
குமரனின் நினைவுகள் ஓங்கும்
முடியர சாண்டநம் நாடும்
குடியர சானதைப் பாரும்
குடியர சானநம் நாடும்
வல்லர சாய் இனி மாறும்
***************************************************************

சு.அய்யப்பன்

ஆல காலமா விஷம்

ஆல காலமா விஷம்
ஓயாத திரவ எமன்
ஒவ்வொரு துளியும் சாவின் சமன்
ஐம்புலன் மயங்கிவிடும்
ஏறும் போதை சுடும்
எல்லாம் மறந்து விடும்
ஊரே நாறி விடும்
உளறல் மீறி விடும்
ஈரல் வெந்து கெடும்
இதயம் நொந்து விடும்
ஆல காலமா விஷம்..?
ஆல்க ஹாலும் விஷம்
அரிக்கும் அமில ரகம்…
மது....